ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் "வணிகத்துறையில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம்" குறித்து கருத்தரங்கு

கோவை நவகரையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் வணிகத்துறை சார்பில் "வணிகத்துறையில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம்" குறித்து ஒருநாள் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி நடத்தினார். ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) தங்கவேலு தலைமை தங்கினார். 



கருத்தரங்கில், ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி பேசுகையில்; தினசரி ஆங்கில பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். மேலும்  நாம் தினசரி செய்தி படிக்கும் போது நம்மை சுற்றி நடக்கும் தகவல்கள் அறிய முடிகிறது. மேலும் அதை பற்றிய செய்திகள் சேகரித்தும் அது மற்றவர்களுடன் பேசுகையில் பல்வேறு தகவல் நமது அறிவுக்கு கொண்டுபோய் சேர்க்கிறது. மேலும், நாம் செய்திதாள் படிக்கும் போது, அதில் உள்ள சுவாரசியமான தகவல்கள் மூலம் நீங்கள் ஒரு குழு மத்தியில் தலைவராக நின்று புள்ளி விவரங்களுடன் உரையாற்றுவதற்கும் நம் பாடங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும், செய்தி சேனல்கள் பார்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதன் மூலம் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் எவ்வாறு கருத்தாக பயன்படுகிறது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கைகள் மூலம் உங்கள் சுய முயற்சியில் ஈடுபடும் போது நீங்கள் ஒரு நல்ல வழியில் வணிக உலகில் தொடர்பை பயன்படுத்தி முன்னேற முடியும் "என்று அவர் கூறினார்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...